தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்தனர் – மனோகணேசன்

483 0

இலங்கையில் ஆரம்பகால தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்ததாக அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை தமிழ் தலைமைகள் புறக்கணித்தனர்.

2000ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க கொண்டுவந்த தீர்வையும் அவர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் அந்த 2 தீர்வுகளும் இன்று தமிழர்கள் எதிர்ப்பார்கும் தீர்வுகளை விட முன்னேற்ற கரமானது என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வரலாறு முழுக்க தமிழ் தலைமையகள் பல சந்தப்பங்களை தவறவிட்;டுள்ளதாக மனோ கணேசன் குற்றம் சுமத்தினார்.

இதனை மையமாக கொண்டு கிடைக்கும் சந்தப்பங்களை சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.