பண்டாரகம உயன்வத்தை வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

82 0

பண்டாரகம-உயன்வத்த வாவியில் விழுந்து காணாமல் போனவரின் சடலம் உயன்வத்தை வாவியின் ராஜகம படகுப் பகுதியில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (4) கண்டெடுக்கப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயன்வத்த வாவிக்கு குளிக்கச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று, ஆண் ஒருவரின் ஆடை, காலணிகள் மற்றும் மதுபான போத்தல்கள் இருபதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் நடத்திய சோதனையின் போது ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது அருந்திவிட்டு நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் ஹொரணை மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன சடலம் இருந்த இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,பாணந்துறை குற்றவியல் ஆய்வக அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்

இதையடுத்து உயிரிழந்தவரின் அடையாளத்தை காண்பதற்காக மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.