பிரிட்டனில் மின்சாரம், எரிவாயுவிலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பிரிட்டனில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் 73 சதவீத மின்சாரம் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு சக்தி, சூரிய சக்தி, நீர்மின் சக்தி மூலம் 30 சதவீதமும், கழிவுகளில் இருந்து 10 சதவீதமும் நிலக்கரி மூலம் ஒரு சதவீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

