மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி வடமத்திய மாநிலம் Arnsberg 20.8.2022.

850 0

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் வடமத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து ஆர்ன்ஸ்பேர்க் (Arnsberg) நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் சென்ற சனிக்கிழமை 20.8.2022 அன்று மிகச்சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு பின்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கும் மக்களுக்குமான அகவணக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தினை வீர வீராங்கணைகள் மைதானத்தைச் சுற்றிக் கொண்டுவந்து ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அணிவகுப்பு நடைபெற்றது அணிவகுப்பில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தேசியக்கொடிகளைக் கடந்துபோகும் போது தமது மரியாதையைத் தேசியக் கொடிகளுக்கு கொடுத்த காட்சி பார்வையாளர்களுக்கு கம்பீரத்தை உருவாக்கியது.

தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில்.

முதலாமிடத்தை வாரன்டோர்ப் (Warendorf) தமிழாலயமும்
இரன்டாமிடத்தை டோட்முன்ட் (Dortmund) தமிழாலயமும்
மூன்றாமிடத்தை போகும் ( Bochum) தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.