மதிமுகவினருடன் மோதல் வழக்கில் சீமான் விடுதலை

300 0

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை வரவேற்பதில், 2 கட்சிதொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சோமு உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சிவக்குமார் நேற்று அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சீமான் உள்ளிட்டோர் மீது அரசுத் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். இதற்காக சீமான் உள்ளிட்ட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.