ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

269 0

யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம்,அலஸ்த்தோட்டம், இடிமண், சின்னத்தோட்டம், சோலையடி,பெரியகுளம்,திருமால்புரம்,உவர்மலை,மின்சாரநிலைய வீதி போன்ற இடங்களைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள், நாற்றுகள் என்பன வழங்கப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்ற திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழ் மக்களுக்கும் அகம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.