சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.