யேர்மனியின் சோலிங்கன் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

465 0

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின்  சோலிங்கன் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி சுடர் ஏற்றி வணங்கினர்.

அத்தோடு செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளின் நிழற்படங்களை கண்காட்சியாக நிறுத்தி ஈன இரக்கமற்ற
சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தினர். இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய பதிவுகளும் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.