கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

217 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட நிறைவின் போது இந்த யாப்பு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருட பூர்த்தி மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் அகில இலங்கை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அறவிக்கப்பட்டுள்ளது.