யாழ். சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூல உயர் டிப்ளோமா பாடநெறி

99 0

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் கலாச்சா மத்திய நிலையத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா பாட நெறியினை டவர் மண்டப அரங்க மன்றம் நடத்தி வருகின்றது.

உயர் டிப்ளோமா கற்கும் மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வி மானிக் கற்கையை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்று அவர்கள் பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொள்வார்கள்.

இச்செயற் திட்டத்தின் முக்கிய விடயமான டவர் மண்டப அரங்க மன்றத்திற்கும் திறந்த பல்கலைக்கழகத்திற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை இம்மாதம் 24 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் காரியாலயத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கலாச்சார அமைச்சின் செயலாளர், டவர் மண்டப அரங்க மண்டப பணிப்பாளர் நாயகம், திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.