மாலபே – கஹந்தோட்டை பிரதேசத்தில் தங்க நகை திருடன் ஒருவனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியிலுள்ள சந்தேகநபர் பல தடவைகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்களை திருடியுள்ளார்.
இந்த சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்