கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

296 0

கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.

சற்றுமுன்னர் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி.வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட நான்காயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், இணைந்த வடக்கு கிழக்கே எமது தாயகம், போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணைகள் வேண்டும், பிறந்த மண்ணே எமது வாழ்விடம், ஒற்றையாட்சி தீர்வல்ல சமஷ்டி அடிப்படையிலான ஒரு கூட்டாட்சியே எமக்கு தேவை, கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனவாத மேலதிக்கத்தை நிறுத்துவதை வலியுறுத்துகின்றோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு எழுக தமிழ் பேரணியில் பொதுமக்கள்பங்கேற்றுள்ளனா