கொரோனா தொற்று யாழ். போதனாவில் 6 பேருக்கு சிகிச்சை

113 0

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் .

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர் பெற்றுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.