கிளிநொச்சி – பளையை சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த இளம் குடும்பத்தர், இரத்தப் புற்றுநோய் காரணமாக பிரான்ஸ் நாட்டில் இன்று (09) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்த நிலையில், திருமணம் செய்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்தக் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.