துப்பாக்கிகளுடன் மூவர் கைது

144 0

நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய

அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவலவ பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லுனுமட, மொதரவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து டீ-56 ரக துப்பாக்கி, 8 தோட்டாக்கள்  மற்றும்  அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது டன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த போலியான வாகன இலக்கத்தகடுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இருவரும் கஹவத்த மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்   எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் கள்.

புளியங்குளம்

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரசன்குளம் பிரதேசத்தில்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய பரசன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்றும் சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.