வடக்குஇ கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிக்கிறது!

138 0

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிப்பதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவனாது   ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள்குரல் என்ற தொணிப்பொருளில் செயற்படுகின்றது.

நாம் அவர்களை கேட்கிறோம் வடகிழக்கில் எங்கு கௌரவத்தை பார்க்கமுடியும்? இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள உளவாளிகளின் மேலாண்மை, கற்பழிப்பு, கொலைகள், கடத்தல்கள்,   மற்றும் உளவு பார்ப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளுதல் இவைகள் தான் உங்கள் கௌரவமா?

அத்துடன் 13 வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார ரீதியாக பரவலாக்கப்படும் உரிமையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1987ல் தமிழர்களாலும் அவர்களது அரசியல் தலைவர்களாலும் 13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

13வது திருத்தத்தை ஏன் நீங்கள்கோருகிறீர்கள்? இந்த பொருளாதார நெருக்கடியின் போது, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கட்டாயப்படுத்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் அது செய்யவில்லை. மேலும், 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது.

நாங்கள் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட வட-கிழக்கில் வாழ விரும்புகிறோம்.மக்களுக்கு 13வது திருத்தம் பிடிக்குமா அல்லது இறையாண்மை பிடிக்குமா என்று பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களிடம் கேளுங்கள்.அதுவே ஜனநாயகம்.

அத்துடன் “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கெளரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்பதாக இந்த ஒருங்கிணைப்பு குழு சொல்கின்றது.இது சம்பந்தன் அல்லது ஜனாதிபதி ரணிலிடம் இருந்து நீங்கள் கட்டளையை பெற்றது போல் தெரிகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். என்றும்அவர்கள் சொல்கிறார்கள். நாம் சொல்கிறோம்அதிகாரப் பரவலாக்கம் ஒரு  ஜனநாயகம் அல்ல,அதிகாரப் பகிர்வு  என்பதும் ஜனநாயகம் அல்ல. நாங்கள் மட்டுமன்றி, ஈழத் தமிழர்கள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; புலம்பெயர் தமிழர்கள் என அனுவரும், பொது வாக்கெடுப்புக்கே அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழர்கள் எத்தகைய அரசியல் கட்டமைப்பை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க தமிழர்களை அனுமதிக்குமாறு நாங்கள் கேட்கும் கருவி அதுவே. வாக்கெடுப்பில் தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விஷயங்களை உள்ளடக்களாம் . இந்த முறையே ஜனநாயகம் ஆகும். இருட்டில் இருந்து வெளியே வந்து இது வேண்டும், அது வேண்டும் என்று சொல்லாதீர்கள்.எனவே இந்த 100 நாள் செயல் முனைவு குழு வீட்டிற்குச் சென்று பொது வாக்கெடுப்பை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் வேண்டும். இந்த சுதந்திரங்கள் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். அதுவரை புலம்பெயர் தமிழ் மக்கள் இங்கு முதலீடு செய்ய மாட்டார்கள்.பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரம் இல்லாமல் 1983 இல் தமிழர்களின் பொருளாதாரத்திற்கு  என்ன ஆனது என்பது அனைவருக்கும் நினைவிருக்கிறது.

எனவே  வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு என்றவிடயத்தை  பயத்தில் உச்சரிக்காமல், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்றபெயரை எடுத்துக்கொள்வது ஒரு போலி நாடகம் என்றனர்.