ரம்புக்கனை சம்பவம் – நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை

127 0

ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கேகாலை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.