ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை

120 0

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

04 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பாடசாலையின் அதிபர் அலுவலகத்தின் கூரை ஓடு பிரிக்கப்பட்டு அலுவலகத்திற்குள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 6 மடிக் கணிணிகள், மின்விசிறி ஒன்று, புகைப்பட கருவி ஒன்று, மேசை கணிணி ஒன்று உள்ளிட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் வலயக் கல்வி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.