ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

163 0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.