வடக்கு மாகாண தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில்

286 0

வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் சகல தனியார் பேரூந்துகளும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண இதனை தெரிவித்தார்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிறுத்தும் நிலையம் தொடர்பில் அண்மையில் தனியார் மற்றும் அரச பேரூந்து உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்த வந்த தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்றைய தினம், மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சேவை புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.