அலரி மாளிகையில் இரு தொலைக்காட்சிகளை திருடியவருக்கு விளக்கமறியல்

186 0

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி பிரவேசித்து, அங்கிருந்த மின்னழுத்தி ஒன்றினை திருடியதாக கூறப்படும் நபர் ஒருவரை கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் அசேல தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை நேற்று இரவு 7.10 மணியளவில் கைது செய்துள்ளனர். கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெருவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் இருந்து இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த மின்னழுத்தி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் தெரிவித்தது. சந்தேக நபர் இன்று ( 28) கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் கொள்ளுபிட்டி அலரிமாளிகையை சுற்றி வளைத்த போது, அம்மாளிகைக்குள் அத்து மீறி அங்கிருந்த இரு தொலைக்காட்சிகளை திருடியதாக கூறப்படும் நபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்து இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன் ஆஜர் செய்தனர். ; இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார் .