இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என சிங்கப்பூரின் சீர்திருத்த கட்சியின் செயலாளர் நாயகம் கென்னத் ஜெயரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூரின் சட்டமா அதிபர் லூசியன் வொங்கிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் யுத்தகுற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என கோரி இந்த கடிதத்தில் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில்- ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வருடம் ஆற்றிய உரையில் எங்கள் அரசாங்கம் ( சிங்கப்பூர்) சர்வதேச நியாயாதிக்கத்தை அங்கீகரித்திருந்தது என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் உள்ளன .அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பெருமளவிலானவை,கொடுரத்தன்மை கொண்டவை என தெரிவித்துள்ள கெனெத் ஜெயரட்ணம்,அவர் மீது குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான ஆதாரதேவைகள் போதியளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிரான குற்றங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் குற்றவியல் முறைப்பாட்டில் காணமுடிகின்றது அதனை நான் இங்கே மீண்டும் தெரிவிக்க வேண்டியதில்லை. அந்த குற்றச்சாட்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சரணடைந்த போராளிகள் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும் ; வேண்டுமென்றே குண்டுவீச்சு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நிலைகள் மீதான எறிகணை வீச்சு உடல்களை சிதைத்தல் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பாவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
நான் தமிழனாகயிருந்தாலும் சிங்கப்பூர் பிரஜை என்ற அடிப்படையில் எங்களது பன்முக கலாச்சாரத்தை பாராட்டுகின்றேன்,இது சிறுபான்மை இனத்தவர் நல விவகாரம் இல்லை,எனவும் தெரிவித்துள்ள அவர் கோத்தபாயராஜபக்ச குடும்பம் சிங்கப்பூரில் தங்கியிருப்பது சிங்கப்பூர் தமிழர்களை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தமிழர்களின் உறவினர்கள் பல இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் காயங்களிற்குள்ளாக்கப்பட்டுள்ளனர் வீடுகளை இழந்துள்ளனர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் அல்லது இருந்த சிலவற்றையும் தொலைத்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவரை வன்முறை கும்பல் எவ்வாறு படுகொலை செய்தது என தனது உறவினர் ஒருவர் தெரிவித்தார் என எனது தந்தை தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

