யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களுடைய போராட்டத்திற்கு மதிப்பளி, நாட்டை கொள்ளையடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி விரிவுரையாளர்கள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

