இன்று முதல் கியூ.ஆர். முறைமையில் எரிபொருள் விநியோகம்

249 0

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூ.ஆர். குறியீட்டு முறைமை இன்று 26) முதல் அமுல்படுத்தப்படுகிறது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு கஞ்சன விஜேசேகர நேற்று இதனை அறிவித்திருந்தார்.

அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக கியூ.ஆர். குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.