ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்: தீபா

236 0

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட அழைப்புவிடுத்தது ஊடகங்களில்தான் பார்த்தேன். நேரடியாக எந்த அழைப்பும் பெறவில்லை. அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்.

தற்போதைய சூழலில் நான் ஏதும் கருத்து கூற விரும்பவில்லை. என்னைப் பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம்’ எனத் தெரிவித்தார்.