QR முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

202 0
QR முறைக்கமைய நாளை (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாகன பதிவெண் அடிப்படையில் இன்று எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கிடைக்காததால் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR முறை சோதனை நடவடிக்கை வெற்றியடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4,708 வாகனங்களைப் பயன்படுத்தி தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் பரிசோதிக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.