புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

92 0

இன்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புகையிரத கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தொழில்சார் நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.