ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் , ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்துள்ளார்.
அமைச்சிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி , பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் வரவேற்கப்பட்டார்.
இதன் போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிலுள்ள அதிகாரிகளுடன் சமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்த பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அமைச்சர் டிரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி ஜெனரல் ஜெனரல் சவேந்திர சில்வா , முப்படை தளபதிகள் , பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு பிரதானி, தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

