ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்- வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

93 0

அடுத்த திங்கட்கிழமை முதல், மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன்) மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வெள்ளியில் வீட்டில் இருந்தோ அல்லது ஓன்லைன் மூலமோ கல்வி நடவடிக்கை இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு முன்னதாக வெளியிட்ட நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.