இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவு : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

102 0

இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று சபை அமர்வில் கலந்து கொண்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களில் , அகில இலங்கை தமிழ் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும் , டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும் , அநுரகுமார திஸாநாயக்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.