19, 20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் என்ன நடக்கும்? – முழு விபரம்

244 0

இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது.

இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும்.

அப்படியாயின் அது எமது நாட்டின் வரலாற்றில் புதிய அனுபவமாக இருக்கும்.

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாயின் பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடைமுறை அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.