தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவெடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19 ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு கொழும்பிலுள்ள கட்சி செயலகத்தில் கூடி கலந்துரையாடவுள்ளது.
இந்நிலையில், 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ; மேலும் தெரிவத்துள்ளார்.

