யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு

170 0

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த வீட்டினுள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து இன்று காலையில் வீட்டார் எழுந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது மோட்டார் சைக்கிளில் இயங்காத நிலையிலையே பெட்ரோல் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது

அதன் பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடிக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் வீடியோ காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.