மட்டக்களப்பில் சூட்டுக்காயங்களுடன் இறந்த யானை மீட்பு!

150 0

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை பல்லாவிக் குளத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் திகதி ; மீட்கப்பட்டதாக, ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து,
மட்டக்களப்பு மாவட்ட  வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டப் பொறுப்பாளர் தலைமையிலான அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு சென்று இறந்த யானையை மீட்டுள்ளனர்.

குறித்த யானையின் உடம்பில் ; நாள்பட்ட சூட்டுக் காயங்கள் காணப்படுவதுடன், குறித்த யானை இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையொன  வனஜீவராசி திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.