யேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் சமைத்த உணவு வழங்கும் திட்டம்.

383 0

யேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் தற்போதைய பொருளாதார பிரச்சினையால் பட்டினிச் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை ஈடுசெய்யும் முகமாக சமைத்த உணவு வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவேற்குடா கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உணவு வழங்கப்பட்டன. இதில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேருக்கு இரண்டு நேர சமைத்த உணவு வழங்கப்பட்டது.இவ்வுதவிகளைப் பெற்ற மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள், யேர்மன் கல்விக்கழக புகைப்படப்பிரிவு இளையோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.