போயஸ் கார்டனில் தமிழக அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

209 0
தமிழக முதல்வராக சில தினங்களில் சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தன்னை கட்டாயப்படுத்திதான் ராஜினாமா செய்ய வைத்தனர் என பேட்டியளித்து ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், பன்னீர் செல்வத்தின் பேட்டி குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.