பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்

195 0

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள் பல்வேறு அதிரடியாக தகவல்களை தெரிவித்தார்.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்

இந்த ஆட்சியில் அனைத்துமே மர்மமாக இருகிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவே விடவில்லை.

முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அரசியல் சாசனப்படி உரிய ஆட்சியை ஆளுநர் அமைக்க வேண்டும்.

பன்னீர் செல்வம் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி நடைபெற்ற மக்கள் நல பணிகளை  ஆதரித்தோம். மக்களுக்கு ஆதரவான பணிகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும். திமுக எதிர்க்கட்சியாக தான் செயல்படும். எதிரி கட்சியாக செயல்படாதுஎன தெரிவித்தார்.