நாளை சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

361 0
தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்று விட்டதால் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை காலை சென்னை வருவதாக  மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பையில் அவர் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வித்யாசாகர் ராவின் வருகைக்கு பின்னர் தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவி ஏற்கும் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, அன்பழகன், உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.