எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

256 0

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொதுச்செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிழக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்வு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்