தம்பலகாமத்தில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

149 0

இந்தியா தமிழ் நாட்டின் இரண்டாம் கட்ட மனிதாபிமான நிவாரண பொருட்கள் இன்று (05) ; தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு ; கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தெலுங்கு நகர் பகுதியில் வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இவ் நிவாரணப் பொதிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு இந் நிவாரணப் பொதிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் இழந்த விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமையின் கீழ் வாழ்பவர்களும் தெரிவு செய்யப்பட்டே இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் ; தலைமையின் கீழ் இடம் பெற்றது.