முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 சைக்கிள்கள், 05 தண்ணீர் பம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தண்ணீர் பம்பிகள் திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் மளிகை கடையில் நின்ற சைக்கிள் ஒன்றினை திருடி ; சென்ற வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான ; குழுவினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்கள்.
.இதன்போது சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் அடையாளப்படுத்தப்பட்திருந்ததுடன் அவருடன் தொடர்புடைய மாந்தை கிழக்கு பகுதியை ; சேர்ந்த மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 03 சைக்கிள்கள், 05 தண்ணீர் பம்புகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவர்களை இன்று 05.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ; நட்டாங்கண்டல் ; பொலிசார் தெரிவித்துள்ளனர்.

