ஐ.எம்.எப் பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கை விரைவில்

149 0

இலங்கையின் நெருக்கடி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் தனது கண்காணிப்புகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையை கைச்சாத்திட வாய்ப்புகள் உள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் மூலமாக தெரியவருகின்றது.

கடனாக அன்றி கையிருப்பாக அந்த நிதி வைப்புச் செய்யப்படவுள்ளதோடு இதன் மூலம் வெளிநாட்டு கையிருப்பை சற்று பலப்படுத்திக்கொள்ள முடிவதுடன், ஏனைய நாடுகளுடன் நிதி அல்லது பொருட்கள் ரீதியிலான கடன்களை பெற்றுக்கொள்ள எதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.