ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் உடல் கருகி பலி

115 0

ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.