விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில், மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து தேகாரோக்கிய உடற்பயிற்சி நிகழ்வுகள் ஆரம்பமாயின.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன், செயலக கணக்காளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் குறித்த தேகாரோக்கிய பயிற்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.