அடுத்து நான் கைதாவேனோ- ரோஹித்த

359 0

Rohitha Rajapaksa (18)தன்னையும் அதிகாரிகள் கைது செய்து சிறையிலிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புதிய மெகஸின் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் அங்கு விஜயம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை புதிய மெகஸின் சிறைக்கு விஜயம் செய்த ரோஹித ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த அச்சநிலையை வெளிப்படுத்தினார்.

அத்துடன் இந்த சிறையில் மஹிந்த ராஜபக்ச, யோஷித்த ராஜபக்ச, பெசில் ராஜபக்ச ஆகியோரும் அடைக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் சில தினங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் வரவுள்ளதாக அறியக்கிடைத்தது என்றும் ரோஹித்த ராஜபக்ச எதிர்வு கூறினார்.

சிறையிலும் நாமல் ராஜபக்ச மகிழ்ச்சியாகவே காலத்தை கழித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.