எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்தில் உயிரிழப்பு

108 0

களுத்துறை மாவட்டத்தில் , மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்ரொன்றில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலைப் பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்த நிலையில் , லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.