குவாட் நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்

112 0

அவுஸ்திரேலியா இந்தியா அமெரிக்க ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதிபிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சடர் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவது தொடர்பில் குவாட்சகாக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளது ஆனால் தற்போது இருதரப்பு அடிப்படையில் இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே கவனம் செலுத்திவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான ; வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.