எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம்

179 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு பெற வேண்டி குடியாத்தம் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கரகோஷம் எதிரொலித்துள்ளது. எடப்பாடி அணியினர் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று வழியுறுத்தி வருகின்றனர்.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டை தலைமை தொடரலாம் என்று கூறி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வாக வேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் செய்தனர்.

நேற்று இரவு நடந்த இந்த யாகத்திற்கு முன்னாள் நகரமன்றத் தலைவர் எம். பாஸ்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, முன்னாள் நகர மன்றத் தலைவர் எஸ்.அமுதா, நகர அ.தி.மு.க. பொருளாளர் வி.என்.தனஞ்ஜெயன், மாவட்ட பிரதிநிதி எஸ்.என். சுந்தரேசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.என்.சிவப்பிரகாசம், எஸ். இமயவரம்பன், ஜி.தேவராஜ், வி.ஜி.பழனி உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.