முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்து 3 நாள் கடந்து விட்டபோதும் ஆக்க பூர்வமாக எவையும் மேற்கொள்ளப்பனவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நான் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்து இன்று 3 நாள் கடந்து விட்டபோதும் ஆக்க பூர்வமாக எவையும் மேற்கொள்ளப்பனவில்லை.
கேப்பாபுலவு மக்களின் நியாயபூர்வ கோரிக்கை தொடர்பில் கடந்த வியாழக கிழமை காலையில் நாடாளுமன்ற உறுப்பின் சாந்தி சிறிஸ்கந்தராஜா போதிய ஆதாரங்களுடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
நான் உடனடியாகவே அது தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அது தொடர்பினில் உறிய அறிவித்தல்களில் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனவே உடனடியாக ஆராய்ந்து சீர் செய்வதாக வாக்களித்தார்.
இருப்பினும் அது தொடர்பினுல் இதுவரைக்கும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை வேதனைக்குரியது. எனவே இது தொடர்பினில் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
அவ்வாறு தொடர்பு கொள்ள முடியாதமைக்கான காரணம் தொடர்பினில் ஆராய்ந்தபோது அவர் சுகயீனம் காரணமாக ஓய்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே எது எப்படி இருப்பினும் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு ஆவண செய்தே ஆகவேண்டும். எனவே இன்றைய தினம் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இடம்பெறு முயற்சிக்கின்றோம். என்றார்.

