அபிவிருத்திப் பணிகளில் சிறீலங்கா இராணுவத்துக்கு முக்கிய இடம்

312 0

army_vavuniya_003நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில் – இராணுவ ஒருங்கிணைப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய முப்படைகளினதும் அறிவும் வளங்களும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், அமைதியைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள தேச அபிவிருத்தி அமைப்பில் சிறீலங்காப் படையினர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.